பெரிய எழுத்தாளர்கள் எல்லாம் பூனையை பற்றி கண்டிப்பாக எழுதுவார்கள் என்று ஒரு பெரிய எழுத்தாளர் சொன்னார். ..
நானும் பூனையை பற்றி எழுதலாம் என்று இருக்கிறேன் ஹி ஹீ
பூனை வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணி தான்
நான் மூன்றாவது படித்து கொண்டு இருந்த போது தான் வெள்ளை வெளேர் என்று சின்ன குட்டியாய் பப்பி வந்து சேர்த்தது
நானும் எனது தம்பியும் ஸ்கூல் விட்ட நேரம் போக அதனுடன் தான் விளையாட்டு
எங்கு இருந்தாலும் நான் ப்ளீஸ் ப்ளீஸ் என்று குரல் கொடுத்தால் என்றால் உடனே வந்து விடும்; ஒய்யாரமாக வந்து காலை உரசி செல்லும்; அழகாக மடியில் வந்து தூங்கும் அதனை அசைக்காமல் எடுத்து மேஜையில் வைத்து தடவி கொடுத்து அது தூங்குவதை பார்த்து கொண்டு இருப்பேன்.,எனது தம்பி அதன் காதை ,தலையை தூக்கி கொஞ்சம் முரட்டு தனமாக விளையாடுவான்
அதனால் அவனிடம் அது அதிகமாக போகாது .
அந்த பூனையை குளிக்க வைத்து உணவு இட்டு விளையாடுவது தான் பெரும்பாலும் லீவ் நாட்களில் வேலையாக
இருக்கும் .
இரவு நேரம் மட்டும் அதனை தனி ரூமில் விட்டு விடுவார்கள் ;அதன் மியாவ் மியாவ் என்ற குரல் பாவமாக இருக்கும்
சில சமயம் அந்த ரூமில் இருந்து விடுவித்து விடுவேன்
சமத்தாக சோபா வுக்கு அடியில் வந்து தூங்கி விடும்
இப்படி இருந்த அந்த பப்பி இரண்டு வருடங்கள்
வண்டியில் அடிபட்டு இருந்து விட்டது .,எனக்கு ரொம்ப வருத்தம் ;நான் அழுத அழுகையை
பார்த்தோ என்னவோ , கொஞ்ச வருஷம்
வீட்டில் பூனையே வளர்க்கவில்லை
பிறகு ஹை ஸ்கூல் படிக்கும் போது ரோஸி அதற்கு பின் ஜீனோ
இப்போது எங்க அம்மா வீட்டில் இருப்பது தாராஇப்போது என் பசங்க அதனோடு
பூனையாரே பூனையாரே,
போவதெங்கே சொல்லுவீர்?
கோலிக்குண்டு கண்களால்
கூர்ந்து ஏனோ பார்க்கிறீர்?
பஞ்சுக்கால்களாலே நீர்
பையப் பையச் சென்றுமே
என்ன செய்யப்போகிறீர்?
எலி பிடித்துத் தின்னவா?
அங்கு எங்கே போகிறீர்?
அடுப்பங்கரையை நோக்கியா?
சட்டிப் பாலைக் குடிக்கவா
சாது போலச் செல்கிறீர்?
சட்டிப் பாலும் ஐயையோ
ஜாஸ்தியாகக் கொதிக்குதே!
தொட்டால் நாக்கைச் சுட்டிடும்
தூர ஓடிப் போய்விடும்!
பூனையாரே பூனையாரே,
போவதெங்கே சொல்லுவீர்?
பூனையை பற்றிய சில தகவல்கள்
பூனை பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு ஊனுண்ணி ஆகும். இவை மனிதனால் பழக்கப்பட்டு வீடுகளில் வளர்க்கப்படுகின்றன. வீடுகளில் வளர்க்கப்படும் பூனைகள் சைவ உணவையும் உண்கின்றன. இவை பொதுவாக 2.5 லிருந்து 7 கிலோகிராம் வரை (5.5–16 இறாத்தல்) எடை கொண்டவையாக இருக்கின்றன. சிறிய அளவிலான பூனைகள் 1.8 கிலோ கிராமுக்குக் (4.0 இறாத்தல்) குறைவாகக் காணப்படும்.
பூனைகளுக்கு 30 முள்ளந்தண்டு எலும்புகள் உண்டு (மனிதனுக்கு 33). நுண்ணிய கேள்விப்புலனைக் கொண்ட பூனைகளின் காதுகளில் 32 தசை நார்கள் காணப்படுகிறது. பூனைகளின் அதிகூடிய சத்த அதிர்வுகள் 64 கிலோஹேர்ட்ஸ். நூறுக்கும் மேலாக வேறுபடுத்தி காண்பிக்கும் குரல் அமைப்பு கொண்டவை.
நுகரும் புலன், மனிதனை விட 14 மடங்கு அதிகம்.
நாளாந்தம் 12-16 மணி நேரம் உறங்கும். சாதாரணமாக உடல் வெப்பநிலை, 38 – 39 °C (101 – 102.2 °F) வரை காணப்படும்.
பூனைகள் இரவில் நன்றாகப் பார்க்கும் திறன் கொண்டவை.